Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே - Lyrics - Christking - Lyrics

Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே - Lyrics


Album : | Artist :

என்னாலுரைக்க முடியாதே - என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே

முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
தேற்றினார் அகத்தினை

காட்டினில் அலைந்த ஆடுநானே - எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே - இனி
வியந்து விரைந்து பாடுவேனே
நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்

பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே - பாவப்
பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
ஆவல் ஆசையும் அகற்றினாரே - தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்

சத்துருவினால் விளைந்த கோட்டை - எல்லாம்
தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் - பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேனே இனி

ஆசை மிகும் யேசு பெருமானே - பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே
வாச லீலிப்பீவே சீவதேனே - வான
மன்னாவே இலங்கு கதிரோனே
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம்

Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே - Lyrics Ennaluraikka Mudiyade - என்னாலுரைக்க முடியாதே - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
Powered by Blogger.