Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics

ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
அன்பினால் ஜீவனை விட்டீர்-ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்-
சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கி சுமந்து
பதறாதே நான் தான் உன் நல் மேய்ப்பன் ஏசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
காத்திருந்த பல பேரும்-மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:

No comments: