Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics


பல்லவி

அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குறார்

சரணங்கள்

1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோடழியாதூயான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே --- அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே --- அந்தோ

3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரை மீட்டிடவே --- அந்தோ

4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே --- அந்தோ

5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் --- அந்தோ

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics Andho Kalvarill / அந்தோ கல்வாரியில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.