Malai ma Nadhiya / மலைமா நதியோ - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Malai ma Nadhiya / மலைமா நதியோ - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
    மருள் சூழும் கானக வனமோ - எங்கும்
    மீட்பர் சிலுவை சுமப்பேனே

    சரணங்கள்

    1. பள்ளம் மேடு தடை தாண்டியே
    பசாசின் கண்ணிக்கு நீங்கியே
    உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்
    மெள்ள மெள்ள நடந்தே எனின்
    மீட்பர் சிலுவை சுமப்பேனே --- மலைமா

    2. இன்னல் துயர் பிணி வாதையில்
    ஈனரெனைத் தாக்கும் வேளையில்
    துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்
    தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
    தூயச் சிலுவை சுமப்பேனே --- மலைமா

    3. பூலோக மேன்மை நாடிடேன்
    புவிமேவும் செல்வம் தேடிடேன்
    சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்
    ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்
    ஜீவ சிலுவை சுமப்பேனே --- மலைமா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Malai ma Nadhiya / மலைமா நதியோ - Tamil Christian Songs Lyrics Malai ma Nadhiya / மலைமா நதியோ - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.