Koor Aani Tagam Paaiya / கூர் ஆணி தேகம் பாய -Tamil Christian Songs Lyrics

    Koor Aani Tagam Paaiya / கூர் ஆணி தேகம் பாய -Tamil Christian Songs Lyrics

    1. கூர் ஆணி தேகம் பாய
    மா வேதனைப்பட்டார்
    பிதாவே, இவர்கட்கு
    மன்னிப்பீயும் என்றார்.

    2. தம் ரத்தம் சிந்தினோரை
    நல் மீட்பர் நிந்தியார்;
    மா தெய்வ நேசத்தோடு
    இவ்வாறு ஜெபித்தார்.

    3. எனக்கே அவ்வுருக்கம்
    எனக்கே அச்செபம்;
    அவ்வித மன்னிப்பையே
    எனக்கும் அருளும்.

    4. நீர் சிலுவையில் சாக
    செய்ததென் அகந்தை;
    கடாவினேன், இயேசுவே,
    நானுங் கூர் ஆணியை.

    5. உம் சாந்தக் கண்டிதத்தை
    நான் நித்தம் இகழ்ந்தேன்;
    எனக்கும் மன்னிப்பீயும்,
    எண்ணாமல் நான் செய்தேன்.

    6. ஆ, இன்ப நேச ஆழி!
    ஆ, திவ்விய உருக்கம்!
    நிந்திப்போர் அறியாமல்
    செய் பாவம் மன்னியும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Koor Aani Tagam Paaiya / கூர் ஆணி தேகம் பாய -Tamil Christian Songs Lyrics Koor Aani Tagam Paaiya / கூர் ஆணி தேகம் பாய -Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.