Paareer Getsemana / பாரீர் கெத்சமனே - Tamil Christian Songs Lyrics

    Paareer Getsemana / பாரீர் கெத்சமனே - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    பாரீர் கெத்சமனே 
    பூங்காவில் என் நேசரையே 
    பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும் 
    சத்தம் தொனித்திடுதே

    சரணங்கள்

    1. தேகமெல்லாம் வருந்தி
    சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏகசுதன்
    படும் பாடு எனக்காகவே --- பாரீர்

    2. அப்பா என் பாத்திரமே
    நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
    தத்தம் செய்வேன் என்றாரே --- பாரீர்

    3. ரத்தத்தின் வேர்வையாலே
    மெத்தவும் நனைந்ததே
    இம்மானுவேல் உள்ளம் உருகியே
    வேண்டுதல் செய்தாரே --- பாரீர்

    4. மும்முறை தரைமீது
    தாங்கொணா வேதனையால்
    உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
    பாதகன் மீட்புறவே --- பாரீர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Paareer Getsemana / பாரீர் கெத்சமனே - Tamil Christian Songs Lyrics Paareer Getsemana / பாரீர் கெத்சமனே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.