En meetpar uyirodu kaiyile | என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - Lyrics - Christking - Lyrics

    En meetpar uyirodu kaiyile | என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - Lyrics



    என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
    கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

    என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
    என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
    விண்ணுல குயர்ந்தோர்
    உன்னதஞ் சிறந்தோர்
    மித்திரனே சுகபத்திரமருளும்

    பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
    பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
    சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
    சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

    ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
    அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
    மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
    மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

    கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
    கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
    பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
    பரமபதவியினுள் என்றனை எடுப்பார்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    En meetpar uyirodu kaiyile | என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - Lyrics En meetpar uyirodu kaiyile | என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - Lyrics Reviewed by Christchoir on July 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.