Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics - Christking - Lyrics

Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics

Vara Vinai Vanthalum

வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே

சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே

தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே

Worship Songs Lyrics,
Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics Vara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும் : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.