Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு - Christking - Lyrics

    Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு

    பல்லவி
    ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

    அனுபல்லவி
    நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
    நிறைந்த சத்திய ஞான மனோகர
    உறைந்த நித்திய வேதா குணாகர,
    நீடு வாரி திரை சூழ மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

    சரணங்கள்
    எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
    என்றென்றைக்கும் பணிபாதர் ,
    துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
    சோதனைசெய் அதி நீதர்,
    பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
    பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
    பண்பதாய்சு யம்பு விவேகன்,
    அன்பிரக்கத யாளப்பிரவாகன்
    பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
    பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

    நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
    நீணலத்தில்லாமல் அழிந்து ,
    தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
    தேவ திருவுளம் உணர்ந்து,
    பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
    பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
    Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.