Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Christking - Lyrics

    Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
    ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

    நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
    எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

    1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
    அனைவரும் பாக்கிய மென்பாரே
    முடிவில்லா மகிமை செய்தாரே – பல
    முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

    2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
    பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
    உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
    உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

    3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
    முனியாபி ராமுட ஜனமதன்பால்
    நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
    நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா
    Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Aathuma Kartharai Thuthikkirathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.