Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் - Christking - Lyrics

Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய்

எந்நாளு மேதுதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
எந்நாளு மேதுதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.

பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்.

நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.

பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது.

மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.

தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.