Enthan Vanjai - எந்தன் வாஞ்சை நீரல்லோ - Christking - Lyrics

Enthan Vanjai - எந்தன் வாஞ்சை நீரல்லோ

எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மை நினைத்து பாடுவேன்
உம்மை துதித்து என்றும் போற்றி
உந்தன் நாமம் உயர்த்துவேன்

ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமாப்போல
என் ஆத்துமாவும் தேவா
உம்மை வாஞ்சித்தே கதறுதே

நீரே எந்தன் கன்மலையும்
கோட்டையும் அரனுமானவர்
என் சந்தோஷமே என் சமாதானமே
என் நித்திய நம்பிக்கையே

பரலோகில் உம்மை அல்லால்
எனக்கு யாருண்டு இயேசுவே
இப்பூவினில் உம்மையன்றி
விருப்பம் வேறு ஏதைய்யா

பாசமிகு அண்ணல் நீரே
நித்திய ஜீவனில் காரணரே
ஜீவன் தந்து என்னை மீட்டவரே
உந்தனை தொழுகிறேன்

பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்
நிறைந்த தேவனே
வழுவாதென்னை காத்து
கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே
Enthan Vanjai - எந்தன் வாஞ்சை நீரல்லோ Enthan Vanjai - எந்தன் வாஞ்சை நீரல்லோ Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.