Kurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும் - Christking - Lyrics

    Kurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும்

    குருசினில் தொங்கியே குருதியும் வடிய
    கொல்கொதா மலைதனிலே நம்
    குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி
    கொள்ளாய் கண் கொண்டு

    சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
    சிலுவையில் சேர்த்தையோ தீயர்
    திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
    சேனைத்திரள் சூழ

    பாதகர் நடுவில் பாவியினேசன்
    பாதகன்போல் தொங்க யூத
    பாதகர் பரிகாசங்கள் பண்ணி
    படித்திய கொடுமைதனை

    சந்திரசூரிய சகல வான் சேனைகள்
    சகியமால் நாணுதையோ தேவ
    சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால்
    துடிக்காக நெஞ்சுண்டோ

    ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
    இறைவன் விலாவதிலே-அவர்
    தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
    திறந்தூற்தோடுது பார்

    எருசலேம் மாதே மறுதி நீயழுது
    ஏங்கிப் புலம்பலையோ-நின்
    எருசலையதிபன் இள மணவாளான்
    எடுத்த கோலமிதோ
    Kurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும் Kurusinil Thongiye Kuruthiyum - குருசினில் தொங்கியே குருதியும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.