Thuthi Paliyai Seluththa - துதிபலியை செலுத்த - Christking - Lyrics

Thuthi Paliyai Seluththa - துதிபலியை செலுத்த

துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே

என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே
தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
சுமந்தீரையா தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா எங்கள்
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா

பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐயா

உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
Thuthi Paliyai Seluththa - துதிபலியை செலுத்த Thuthi Paliyai Seluththa - துதிபலியை செலுத்த Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.