Thuthi Sei Nee Maname - துதி செய் நீ மனமே - Christking - Lyrics

Thuthi Sei Nee Maname - துதி செய் நீ மனமே

துதி செய் நீ மனமே துதிகளைப் படியே
துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை

பரலோக மகிமை துறந்தவரே
பாவ இவ்வுலகில் வந்தவரே
பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
பாவியை மீட்கவே வந்தவரே

கருணையின் உள்ளம் படைத்தவரே
குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
குருசினில் எனக்காய் மரித்தவரே
குருதியை சிந்தியே மீட்டவரே

இயேசுவையன்றி வேறொருவர்
காசினில் உண்டோ சொல் மனமே
நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
தாசரும் அவர் பாதத்தில் விழுந்து

மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்
மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்

நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
நாசம் என்றும் நம்மை அணுகாமலே
ஆதரித்து என்றும் காத்திடுவார்

நேசரின் வருகை நெருங்கிடுதே
நாச லோகை விட்டு சென்றிடுவேன்
எக்காள சத்தம் தொனித்திடுமே
மத்திய ஆகாயத்தை சேருவோம்
Thuthi Sei Nee Maname - துதி செய் நீ மனமே Thuthi Sei Nee Maname - துதி செய் நீ மனமே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.