Ullamellam Uruguthaiyaa - உள்ளமெல்லாம் உருகுதையோ - Christking - Lyrics

Ullamellam Uruguthaiyaa - உள்ளமெல்லாம் உருகுதையோ

உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே

கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே உம்
சொந்தமாக்கிக் கொண்டீரே

எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்தி வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையை

மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளன்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்த்திட
தியாகராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ
Ullamellam Uruguthaiyaa - உள்ளமெல்லாம் உருகுதையோ Ullamellam Uruguthaiyaa - உள்ளமெல்லாம் உருகுதையோ Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.