Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார் - Christking - Lyrics

    Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார்

    இயேசு பாலனாய் பிறந்தார்
    இயேசு தேவனே பெத்லகேமிலே
    ஏழைக் கோலமாய் முன்னணை
    புல்லனை மீதிலே பிறந்தார்

    உன்னதத்தில் தேவ மகிமை
    பூமியிலே சமாதானமும்
    மானிடரில் பிரியமும் உண்டாவதாக
    என்று தேவ தூதர் பாடிட

    விண்ணை வெறுத்த இம்மானுவேல்
    விந்தை மானுடவதாரமாய்
    தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
    தம்மைப் பணிந்திடுவோம் வாரும்

    ஓடி அலைந்திடும் பாவியை
    தேடி அழைக்கும் இப்பாலகன்
    பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
    பாதம் பணிந்திடுவோம் வாரும்

    கைகள் கட்டின தேவாலயம்
    கர்த்தர் தங்கும் இடமாகுமோ
    நம் இதயமதில் இயேசு பிறந்திட
    நம்மை அளித்திடுவோம் வாரும்

    அன்பின் சொரூபி இப்பாலனே
    அண்டி வருவோரின் தஞ்சமே
    ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
    ஆண்டவரைப் பணிவோம் வாரும்
    Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார் Yesu Balanai - இயேசு பாலனாய் பிறந்தார் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.