Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை - Christking - Lyrics

Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை

Album: Vallavar
Sung by: Beryl Natasha
Lyrics & Tune: Joseph Vinoth @ Joevin
Music: Keba Jeremiah

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை - (2)

என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை....
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் - என்னைக்

உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்....
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ - என்னைக்

உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல...
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் - என்னைக்


Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை Reviewed by Christking on October 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.