En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே - Christking - Lyrics

En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே

Album: Thunaiyalarey-3
Singer: Ps.Reegan Dhanasekar
Music: A Christiyaan Kutti
Lyrics: Ps.Reegan Dhanasekar

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே - (2)

ஆராதனை உமக்கே (4) - உயர்ந்த
1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் - 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே - 2 - ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் - 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 - ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே - 2 - ஆராதனை


En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே Reviewed by Christking on October 02, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.