Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் - Christking - Lyrics

    Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக்


    ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
    அருளிச் செய்தீரே
    அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
    இணைத்தருள்வீரே

    மங்களமாய் திருமறையைத் தொடங்கி
    மங்களாமாய் முடித்தீர்
    மங்கள மா மணவாளனாய்
    மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்

    ஆபிரகாம் எலியேசர் தம்
    மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
    அங்ங்னமே இந்த மங்களம்
    செழிக்க ஆசியருள்வீரே

    கானாவூர் கலியாணம் கண்டு
    களித்த எம் காத்தரே வந்திடுவீர்
    காசினி மீதிவர் நேசமாய்
    வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

    இன்பமும் துன்பமும் இம்மண
    மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
    அன்பர் உம் பாதம் ஆதாரம்
    என்றும்மை அணுகச் செய்திடுவீர்


    Aathiyil Aethaenil Aathaamuk Kaevaalai
    Arulich Seytheerae
    Avvithamaakavae Ivviru Paeraiyum
    Innaiththarulveerae

    Mangalamaay Thirumaraiyaith Thodangi
    Mangalaamaay Mutiththeer
    Mangala Maa Manavaalanaay
    Maintharai Maanilaththil Viduththeer

    Aapirakaam Eliyaesar Tham
    Mantattuk Karul Purintheerae
    Angngnamae Intha Mangalam
    Selikka Aasiyarulveerae

    Kaanaavoor Kaliyaanam Kanndu
    Kaliththa Em Kaaththarae Vanthiduveer
    Kaasini Meethivar Naesamaay
    Vaalnthida Kirupai Seythiduveer

    Inpamum Thunpamum Immana
    Makkal Thaam Isainthu Vaalnthidavae
    Anpar Um Paatham Aathaaram
    Entummai Anukach Seythiduveer

    Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.