Ananthamai Inba Kaanan Yegiduven

    Ananthamai Inba Kaanan Yegiduven


    ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

    அனுபல்லவி

    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    சரணங்கள்

    1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
    மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
    கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
    கண்டு நன்றியுடன் பாடிடுவேன்
    — ஆனந்தமாய்

    2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
    வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
    எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்
    — ஆனந்தமாய்

    3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
    என்றும் எனக்கவர் ஆதரவே
    — ஆனந்தமாய்

    4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
    உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
    தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
    கண் பாரும் என்றும் நான் உம் அடிமை
    — ஆனந்தமாய்

    5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
    ஆற்றிடுதே உந்தன் சமூகமே
    பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
    பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்
    — ஆனந்தமாய்


    Aananthamaay Inpak Kaanaan Aekiduvaen
    Thooya Pithaavin Mukam Tharisippaen

    Anupallavi

    Naalukku Naal Arputhamaay Ennaith Thaangidum
    Naathan Yesu Ennotiruppaar

    Saranangal

    1. Settinintennaith Thookkiyeduththu
    Maatti Ullam Puthithaakkinaarae
    Kallaana en Ullam Urukkina Kalvaariyaik
    Kanndu Nantiyudan Paadiduvaen
    — Aananthamaay

    2. Vaalipa Naalil Yesuvaik Kanntaen
    Vaanjaiyudan Ennaith Thaeti Vanthaar
    Etharkumae Uthavaa Ennaiyum Kanndeduththaar
    Yesuvin Anpai Naan en Solluvaen
    — Aananthamaay

    3. Karththarin Siththam Seythida Niththam
    Thaththam Seythae Ennai Arppanniththaen
    Yesu Allaal Aasai Ippoovinil Vaetae Illai
    Entum Enakkavar Aatharavae
    — Aananthamaay

    4. Ummaip Pin Sentu Ooliyam Seythu
    Umpaatham Sera Vaanjikkiraen
    Thaarum Thaevaa Aelaikkum Maaraatha Um Kirupai
    Kann Paarum Entum Naan Um Atimai
    — Aananthamaay

    5. Thaettiduthae Um Vaakkukal Ennai
    Aattiduthae Unthan Samookamae
    Pelaththin Mael Pelanatainthu Naan Seruvaen
    Paerinpa Seeyonil Vaalnthiduvaen
    — Aananthamaay

    Ananthamai Inba Kaanan Yegiduven Ananthamai Inba Kaanan Yegiduven Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.