Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam - Christking - Lyrics

    Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam


    என்ன பாக்கியம், எவர்க்குண்டு
    இந்தச் சிலாக்கியம்?

    அனுபல்லவி

    விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
    மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன

    சரணங்கள்

    1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
    ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
    கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
    — என்ன

    2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
    காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
    கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
    — என்ன

    3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே
    மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
    மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?
    — என்ன

    4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது
    ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது
    எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
    — என்ன


    Enna Paakkiyam, Evarkkunndu
    Inthach Silaakkiyam?

    Anupallavi

    Vinnnavarum, Puvimaevum Munivarkalum,
    Mannavarung Kaannaa Makipanai Yaan Kanntaen
    — Enna

    Saranangal

    1. Vaanakan Thaano – Allathithu - Vaiyakan Thaano?
    Aanakam Sentu Eluntha Arumporul
    Kaanakan Thannil en Kaiyil Amarnthathu
    — Enna

    2. Saamiyaik Kanntaen – Makaanantham – Saalavunganntaen
    Kaamaru Thaengani Vaaykal Thutippathum,
    Kannnum Manamum Kalikka Vilippathum
    — Enna

    3. Annamum Neeyae – Kitaiththarkarunj Sonnamum Neeyae
    Minnatru Maekath Thirukkai Thuranthaiyo?
    Maethini Thannai Ratchikkap Piranthaiyo?
    — Enna

    4. Pothum Ivvaalvu – Parakathi – Povaen Ippothu
    Aethaen Enta Paratheesum Vanthittathu
    Ennnnillaatha Selvam en Kaiyil Kittuthu
    — Enna

    Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam  Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.