Evannamaaga Karthare Ummai Vanaguven - Christking - Lyrics

    Evannamaaga Karthare Ummai Vanaguven


    1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
    உம்மை வணங்குவேன்;
    தெய்வீக ஈவைப் பெறவே
    ஈடென்ன தருவேன்?

    2. அநேக காணிக்கைகளால்
    உம் கோபம் மாறுமோ?
    நான் புண்ணிய கிரியை செய்வதால்
    கடாட்சம் வைப்பீரோ?

    3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
    பாய்ந்தாலும், பாவத்தை
    நிவிர்த்தி செய்து சுத்தமாய்
    ரட்சிக்கமாட்டாதே.

    4. நான் குற்றவாளி, ஆகையால்
    என்பேரில் கோபமே
    நிலைத்திருந்து சாபத்தால்
    அழிதல் நியாயமே.

    5. ஆனால் என் பாவம் சுமந்து
    ரட்சகர் மரித்தார்;
    சாபத்தால் தலை குனிந்து
    தம் ஆவியை விட்டார்.

    6. இப்போதும் பரலோகத்தில்
    வேண்டுதல் செய்கிறார்
    உம் திவ்விய சந்நிதானத்தில்
    என்னை நினைக்கிறார்

    7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
    உம்மை வணங்குவேன்.
    என் நீதி இயேசுகிறிஸ்துவே,
    அவரைப் பற்றினேன்.


    1. Evvannnamaaka, Karththarae,
    Ummai Vananguvaen;
    Theyveeka Eevaip Peravae
    Eedenna Tharuvaen?

    2. Anaeka Kaannikkaikalaal
    Um Kopam Maarumo?
    Naan Punnnniya Kiriyai Seyvathaal
    Kadaatcham Vaippeero?

    3. Paliyin Raththam Vellamaay
    Paaynthaalum, Paavaththai
    Nivirththi Seythu Suththamaay
    Ratchikkamaattathae.

    4. Naan Kuttavaali, Aakaiyaal
    Enpaeril Kopamae
    Nilaiththirunthu Saapaththaal
    Alithal Niyaayamae.

    5. Aanaal en Paavam Sumanthu
    Ratchakar Mariththaar;
    Saapaththaal Thalai Kuninthu
    Tham Aaviyai Vittar.

    6. Ippothum Paralokaththil
    Vaennduthal Seykiraar
    Um Thivviya Sannithaanaththil
    Ennai Ninaikkiraar

    7. Ivvannnamaaka, Karththarae,
    Ummai Vananguvaen.
    En Neethi Yesukiristhuvae,
    Avaraip Pattinaen.

    Evannamaaga Karthare Ummai Vanaguven Evannamaaga Karthare Ummai Vanaguven Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.