Karthar En Pakkamagil - கர்த்தர் என் பக்கமாகில் - Christking - Lyrics

    Karthar En Pakkamagil - கர்த்தர் என் பக்கமாகில்


    1. கர்த்தர் என் பக்கமாகில்
    எனக்கு பயம் ஏன்?
    உபத்திரவம் உண்டாகில்
    மன்றாடிக் கெஞ்சுவேன்;
    அப்போதென்மேலே வந்த
    பொல்லா வினை எல்லாம்
    பலத்த காற்றடித்த
    துரும்புபோல ஆம்.

    2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
    மேலான கர்த்தரே;
    அதாலே பக்தர் யாரும்
    திடன்கொள்வார்களே;
    நான் ஏழைப் பலவீனன்,
    வியாதிப்பட்டோனே;
    அவரில் சொஸ்தம்இ ஜீவன்
    சமஸ்தமும் உண்டே.

    3. தெய்வாவி என்னில் தங்கி
    என்னை நடத்தவே,
    பயம் எல்லாம் அடங்கி
    திடனாய் மாறுதே;
    அப்பாவே என்று சொல்ல,
    அவர் என் நெஞ்சுக்கே
    ஆற்றல் சகாயம்செய்ய
    என் ஆவி தேறுதே.

    4. என் உள்ளமே களிக்கும்
    துக்கிக்கவேண்டுமோ?
    கர்த்தர் என்மேல் உதிக்கும்
    பகலோன் அல்லவோ?
    பரத்தில் வைக்கப்பட்ட
    அநந்த பூரிப்பே
    என் ஆவிக்கு பலத்த
    திடன் உண்டாக்குமே.


    1. Karththar en Pakkamaakil
    Enakku Payam Aen?
    Upaththiravam Unndaakil
    Mantatik Kenjuvaen;
    Appothenmaelae Vantha
    Pollaa Vinai Ellaam
    Palaththa Kaattatiththa
    Thurumpupola Aam.

    2. En Nenjin Asthipaaram
    Maelaana Karththarae;
    Athaalae Pakthar Yaarum
    Thidankolvaarkalae;
    Naan Aelaip Palaveenan,
    Viyaathippattanae;
    Avaril Sosthami Jeevan

    Samasthamum Unntae. 3. Theyvaavi Ennil Thangi
    Ennai Nadaththavae,
    Payam Ellaam Adangi
    Thidanaay Maaruthae;
    Appaavae Entu Solla,
    Avar en Nenjukkae
    Aattal Sakaayamseyya
    En Aavi Thaeruthae.

    4. En Ullamae Kalikkum
    Thukkikkavaenndumo?
    Karththar Enmael Uthikkum
    Pakalon Allavo?
    Paraththil Vaikkappatta
    Anantha Poorippae
    En Aavikku Palaththa
    Thidan Unndaakkumae.

    Karthar En Pakkamagil - கர்த்தர் என் பக்கமாகில் Karthar En Pakkamagil - கர்த்தர் என் பக்கமாகில் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.