Naan Ummai Marandhalum Neer - Christking - Lyrics

    Naan Ummai Marandhalum Neer


    பல்லவி

    நான் உம்மை மறந்தாலும் – நீர்
    என்னை மறப்பதில்லை
    என் நேசர் இயேசுவே நீர்
    எனக்கு போதுமே

    சரணங்கள்

    1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
    தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
    உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
    உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் — நான்

    2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
    தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
    வேத வசனமே என் பாதைக்கு தீபமே
    முடிவு பரியந்தம் வழி நடத்துமே — நான்

    3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
    உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
    உந்தன் கிருபையே எனக்கு போதுமே
    என்னை என்றுமே நடத்திச் செல்லவே — நான்


    Pallavi

    Naan Ummai Maranthaalum – Neer
    Ennai Marappathillai
    En Naesar Yesuvae Neer
    Enakku Pothumae

    Saranangal

    1. Thaay Maranthaalum Neer Marappathillai
    Thanthai Veruththaalum Neer Ennai Viduvathillai
    Um Ullangaiyilae Ennai Varainthu Vaiththeerae
    Ummai Entumae Naan Paati Pottuvaen — Naan

    2. Paava Settinil Veelnthu Kidanthaenae
    Thookki Eduththu Um Maarpil Annaiththeerae
    Vaetha Vasanamae en Paathaikku Theepamae
    Mutivu Pariyantham Vali Nadaththumae — Naan

    3. Ulakam Verukkalaam Utharith Thallalaam
    Unnathar Nilalilae Naan Saaynthu Uranguvaen
    Unthan Kirupaiyae Enakku Pothumae
    Ennai Entumae Nadaththich Sellavae — Naan

    Naan Ummai Marandhalum Neer Naan Ummai Marandhalum Neer Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.