Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40


ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு-2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

1.விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு...
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான்-2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

2.உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்...
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம்-2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது-2-நான் நம்புவது

3.பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்...
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார்-2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது

4.கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்...
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம்-2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம்-2-நான் நம்புவது

5.நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்....
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா-2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர்-2-நான் நம்புவது


English


Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.