Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40


கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே-2

1.ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே-2
கூப்பிடும்போதெல்லாம்
பதில் தருபவரே-2

யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்-2
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்-2

2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே-2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே-2 -யெகோவா ராஃப்பா

3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
நோய்கள் சுமந்துகொண்டீர்-2
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால்-2 -யெகோவா ராஃப்பா

4.உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை-2
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர்-2 -யெகோவா ராஃப்பா


English


Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம் | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.