Paavam Pokkum Jeevanathiyai Song Lyrics - Christking - Lyrics

    Paavam Pokkum Jeevanathiyai Song Lyrics


    பாவம் போக்கும் ஜீவநதியைப்
    பாரீர் வந்து பாரீர் – பாரில்

    தீவினை தீர்க்கும் தேவமறியின்
    திருரத்த மிந்த ஆறாம் – பாரில்

    கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
    கண்கள் ஐந்து திறந்தே – அதோ
    மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
    வழிந்தோடுது பாரீர் – பாரில்

    பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
    பதறி விழுந் தலறி – நிதம்
    கூவியழுத அனந்தம் பேரிதில்
    குளித்தே யுளங் களித்தார் – பாரில்

    பத்தருளத்தி லிடைவிடாமல்
    பாய்ந்து வளமீந்து – அதை
    நித்தமும் பரிசுத்த குணத்தில்
    நிலைநாட்டுது பாரீர் – பாரில்

    ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
    உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
    அறுதி யடைவர் வேறொருதிநதிக்
    கலையார் தேடி யலையார் – பாரில்

    நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
    நீரார் நிதியிதிலே – தங்கள்
    வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
    வாழ்ந்துகீதம் பாட – பாரில்


    Paavam Pokkum Jeevanathiyaip
    Paareer Vanthu Paareer – Paaril

    Theevinai Theerkkum Thaevamariyin
    Thiruraththa Mintha Aaraam – Paaril

    Kalvaari Malaichchikara Meethoottuk
    Kannkal Ainthu Thiranthae – Atho
    Malkich Siluvai Yatiyil Vilunthu
    Valinthoduthu Paareer – Paaril

    Paavachchumaiyaal Nonthu Sornthu
    Pathari Vilun Thalari – Nitham
    Kooviyalutha Anantham Paerithil
    Kuliththae Yulang Kaliththaar – Paaril

    Paththarulaththi Litaividaamal
    Paaynthu Valameenthu – Athai
    Niththamum Parisuththa Kunaththil
    Nilainaattuthu Paareer – Paaril

    Oruthara Intha Nthiyin Theerththam
    Unntoo Jeevan Kanntoor – Thaakam
    Aruthi Yataivar Vaeroruthinathik
    Kalaiyaar Thaeti Yalaiyaar – Paaril

    Niththiyanthanil Kalanthuraiyunj Sen
    Neeraar Nithiyithilae – Thangal
    Vasthiran Thoyththa Suththar Sapaiyil
    Vaalnthugeetham Paada – Paaril

    Paavam Pokkum Jeevanathiyai Song Lyrics Paavam Pokkum Jeevanathiyai Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.