Parisuthaavi Nee Vaarum Song Lyrics - Christking - Lyrics

    Parisuthaavi Nee Vaarum Song Lyrics


    பரிசுத்தாவி நீ வாரும் திடப்
    படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்-இன்று

    அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே
    ஆவியின் நற்கனி நல்குமா தூயமே

    செயல்குண வசனத் தீதுகள் போக
    திருச்சபை யதிலிவர் பூரணராக
    ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக
    ஜெபதப தியானஞ் செய்வதற்காக

    நற்கருணை தனை நலமுடன் வாங்க
    நாளரு மேனியாய் ஆவியி லோங்க
    சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க
    சகல தீதான பேதங்களும் நீங்க

    அஞ்ஞானங்க ளோடிவர் சமர் புரிய
    அருண்மறை யதினாழங் களையறிய
    நெஞ்சினில் அன்பு கொழுந்துவிட் டெரிய
    நின்னடியாரிவ ரென்பது தெரிய

    பத்தியுந் தாழ்மையுமா யிவர் உய்ய
    பரிசுத்தமான ஜீவியஞ் செய்ய
    நித்தமுங் கிருபையின் கனி கொய்ய
    நிலைவரமாய் இவராவியில் துய்ய

    தினமறை யோதி ஜெபித்து மன்றாட
    திருச்சபை யதின்ஐக் கியத்தினிற் கூட
    உணர்வொடு தொழுது கீதங்கள் பாட
    உள்ளத் திருந்து ஜீவாறு களோட


    Parisuththaavi Nee Vaarum Thidap
    Paduththal Peruvork Karul Thaarum-intu

    Arulinaip Perukkum Akkini Mayamae
    Aaviyin Narkani Nalkumaa Thooyamae

    Seyalkuna Vasanath Theethukal Poka
    Thiruchchapai Yathilivar Pooranaraaka
    Jeyamodu Paeyai Ethirththuk Konntaeka
    Jepathapa Thiyaananj Seyvatharkaaka

    Narkarunnai Thanai Nalamudan Vaanga
    Naalaru Maeniyaay Aaviyi Longa
    Sarkunaraay Ivar Sapaiyaik Kai Thaanga
    Sakala Theethaana Paethangalum Neenga

    Anjnjaananga Lotivar Samar Puriya
    Arunnmarai Yathinaalang Kalaiyariya
    Nenjinil Anpu Kolunthuvit Deriya
    Ninnatiyaariva Renpathu Theriya

    Paththiyun Thaalmaiyumaa Yivar Uyya
    Parisuththamaana Jeeviyanj Seyya
    Niththamung Kirupaiyin Kani Koyya
    Nilaivaramaay Ivaraaviyil Thuyya

    Thinamarai Yothi Jepiththu Mantada
    Thiruchchapai Yathinaik Kiyaththinir Kooda
    Unarvodu Tholuthu Geethangal Paada
    Ullath Thirunthu Jeevaatru Kaloda

    Parisuthaavi Nee Vaarum Song Lyrics Parisuthaavi Nee Vaarum Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.