Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics

ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

சேற்றினின் றென்னைத் தூக்கி யெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருகின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

வாலிப நாட்களில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்ப10வினில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே

உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடவே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.