Nandri Endru Soluvom | Song 13 - Christking - Lyrics

    Nandri Endru Soluvom | Song 13

    நன்றி என்று சொல்லுவோம்
    நல்ல தேவன் கிருபை செய்தார்

    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
    சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
    புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
    உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
    என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
    என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
    இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
    நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
    எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
    பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
    நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
    பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
    நன்மைகளை நினைத்துக் கொண்டு
    நன்றியுள்ள துதியுடன்
    நன்றி நன்றி ஐயா
    நன்றி இயேசையா

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Lyrics
    Nandri Endru Soluvom | Song 13 Nandri Endru Soluvom | Song 13 Reviewed by Christchoir on February 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.