Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics

ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ
என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உறைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்
ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் ப10ரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்
எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்
ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும்
பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்
Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:

No comments: