Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே - Christking - Lyrics

Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் - மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே - சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே
Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.