Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் - Christking - Lyrics

Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி - இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் Eppozhuthu Um Sannithiyil - எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.