Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் - Christking - Lyrics

Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம்

பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே

நன்றி நன்றி நன்றி -2

துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா - என்

கல்வாரி சிலுவையினால் - என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
அடிமைக்குக் கிடைத்ததையா

இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து - உம்
அன்பை ஊற்றினீரே

உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் - என்
உயிரான கிறிஸ்து வந்தால் - உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா -உம்
மிகுந்த இரக்கத்தினால்

வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டு தீபம் நீரே
புயலில் புகலிடமே - கடும்
வெயிலில் குளிர் நிழலே

பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு - அது
எத்தனை மேலானது
Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.