Pandigai Kondaaduvom - பண்டிக்கை கொண்டாடுவோம் - Christking - Lyrics

Pandigai Kondaaduvom - பண்டிக்கை கொண்டாடுவோம்

பண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்
பண்டிக்கை கொண்டாடுவோம்

பண்டிக்கை கொண்டாடிப் பரமனைமன்றாடிப்
பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி

புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி
உண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி

இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே
பொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே

தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்
பரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார்

நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்
பேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக

கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்து
முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே

மனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்
மனுஷனாலே யுயிரெழல் மகிமையாயுண்டானதே

ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே
நாதானால் மெய்யாக நாமுயி ரடைகுவோம்

ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே
மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே
Pandigai Kondaaduvom - பண்டிக்கை கொண்டாடுவோம் Pandigai Kondaaduvom - பண்டிக்கை கொண்டாடுவோம் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.