Ragasiyamaai oru varugai - ரகசியமாய் ஒரு வருகை - Christking - Lyrics

    Ragasiyamaai oru varugai - ரகசியமாய் ஒரு வருகை

    ரகசியமாய் [D min T111 6/8]
    ரகசியமாய் ஒரு வருகை
    அனைவரும் காணும் ஒரு வருகை
    இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
    அதன் நடுவில் மகா உபத்திரரூம்

    Ragasiyamaai oru varugai
    Anaivarum kaanum oru varugai
    Irandukkum naduve ubathiravam
    Adhan naduvil magaa ubathiravam

    சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே வருகிறார் இரகசியமாய்
    சபையை தம்மோடு அழைத்து வருகிறார் வெளியரங்கமாய்
    நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
    அதில் மிகுதியாய் பாடுகள் புவியில் தோன்றுதே

    Sabayai thamakkena eduthukollave
    Varugiraar ragasiyamaai
    Sabaiyai thammodu azhaithu varugiraar
    Veliyarangamaai
    Naduvile yezhu varudam kadandhu poguthe
    Adhil migudhiyaai paadugal puviyil thondrudhe

    நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய் மாறிடுவோம் இரகசியமாய்
    ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம் வெளியரங்கமாய்
    கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு சாதனைதான்- இந்த
    இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக வேதனைதான்

    Nodippozhudhinile veroru roobamaai
    Maariduvom ragasiyamaai
    Yezhu varudangal kazhithu thirumbuvom
    Veliyarangamaai
    Kartharukkul marithu ponaal nalloru saadhanai dhaan
    Indha ratchippai nee asattai seidhaal naraga vedhanaidhaan

    ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும் எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
    யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும் காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
    இது ரகசிய வருகை
    ஒரு அதிசய வருகை

    Aaravaarathodum thoodhan saththathodum
    Yekkaala dhoniyodum irangi varugiraar
    yaarum ariyaa neram ivaigal nadandherum
    kaathirundhaal unnai azhaithuchelluvaar
    idhu ragasiya varugai
    oru adhisaya varugai

    தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம் அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
    மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும் பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
    அதை கண்கள் யாவும் காணும்
    அது முடிவு நெருங்கும் காலம்

    theerkadharisi sonna irudhi yezhu varudam
    andhi kristhu thannai uyarthikolgiraan
    moondrarai aandu kaalam mudindha pinne avanum
    paazhaakkum aruvaruppai uyarthi vaikkiraan
    adhai kangal yaavum kaanum
    adhu mudivu nerungum kaalam

    இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
    மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
    குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
    வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே

    yesuve ratchagar enbadhai nambi nee
    mandraadi mannippai petrukkol indre nee
    kutrangal oppukkol vaazhkaiyai maatrikkol
    verondrum vendaame vendudhal ketpaare

    இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
    ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
    சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
    மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர் நிற்பாரே

    indraikke vandhaalum aacharyam illaiye
    aayathamaaga nee nindraale thappiththaai
    sattendru selluvaai kartharai sandhippaai
    megathil unnaipol nambinor nirpaare

    இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
    மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
    யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
    நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
    சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா

    yesuvai nambaamal ratchippu illaamal
    motchathai ennaadhe mosamaai pogaadhe
    yaakobin kashtathai sandhikka naadaathe
    saathaanin muthirai petruthaan maalaadhe
    nithiya akkini unakku vendaame
    sathiya vedhathin vaarthaiyai nambiye vaa

    பரலோகம் ஒருபுறத்தில்
    பாடுகள் புவியில் மறுபுறத்தில்
    விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
    வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்

    paralogam oru purathil
    paadugal puviyil marupurathil
    vizhippudan irundhaal nee pizhaithiduvaai
    varappogum aakinaikku thappiththukkolvaai
    Ragasiyamaai oru varugai - ரகசியமாய் ஒரு வருகை Ragasiyamaai oru varugai - ரகசியமாய் ஒரு வருகை Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.