Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி
உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ
பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ
அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ
எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ
கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ
ஒருவரில்லையே ஸ்வாமீ
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ
பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ
அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ
எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ
கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ
Unnai Andri Vere Kethi - உன்னையன்றி வேறே கெதி
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
Amen Hallelujah..
ReplyDelete