Yesappa Ummai Thedi - இயேசப்பா உம்மைத் தேடி - Christking - Lyrics

Yesappa Ummai Thedi - இயேசப்பா உம்மைத் தேடி

இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே
இங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீரே

சொந்தம் என்று சொன்னவுடனே
உம்மைத் தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளிலிருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே
என்று மாறா அன்பு ஐயா
உயிரே உயிரே இங்கு
நீரின்றி நானில்லையே
உம்மையன்றி யாரை நம்பி
நானும் தேடி போவது

என் மனதின் வேதனையெல்லாம்
புரிந்து கொள்வார் யாருமில்லை
இதயம் நொறுங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாருமில்லை
அன்பே நீர் மட்டும் என்
வாழ்வில் இல்லையென்றால்
என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என்மேல்
கரிசனை உள்ளவரே
என்னை அறிந்த என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா
Yesappa Ummai Thedi - இயேசப்பா உம்மைத் தேடி Yesappa Ummai Thedi - இயேசப்பா உம்மைத் தேடி Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.