Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் - Christking - Lyrics

Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில்

Album: POKKISHAM
Sung By: AMALI DEEPIKA
Lyrics,Tune & Composed: Ps. M.G.WILSON
Music: VINNY ALLEGRO

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப்பொழுதும் தூங்காமல் -2
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே -2
கானங்களால் நிறைந்து
காலம் எல்லாம் பாடுவேன் - 2

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் -2

1) மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில் - 2
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால் - 2
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் - 2 - அஞ்சிடேன்

2) அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும் - 2
கடல் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னை தூக்கினார் - 2
அலைகள் நீக்கியவர்
அமைதிப்படுத்தினார் - 2 - அஞ்சிடேன்


Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் Irul Soolntha Logathil - இருள் சூழ்ந்த லோகத்தில் Reviewed by Christking on September 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.