Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki - Christking - Lyrics

Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki



எருசலேமே எருசலேமே
யாரை இழந்து அழுகிறாய்
மானிடர் தாகம் தீர்க்கவோ சாபம்
சிலுவை மரத்தில் தொங்கினீர்-2

1.தூய தேகத்தில் ஆணி அடிக்க
கடலும் காற்றும் கலங்குதே-2
விண்ணின் மகனே முள்முடி சிரசோ ?
படைத்த தேவனே உனக்கே சிறையா ?
பரத்தின் கட்டளையா ? - எருசலேமே

2.பாவலோகத்தை நாடி வந்து
எங்கும் நாக்கும் நடுங்குதே-2
கதிரவன் ஒளிக்கு களங்கம் ஏனோ ?
முகாரி வாழ பூபாளம் வீழ்வதா ?
முதல்வன் முழக்கமிதா ? - எருசலேமே

---------------------------------------------------------- கண்மணியே விண்மணியே
பொன்மணி இயேசுவே-2
ஆதியில்லா அந்தமில்லா
அற்புத பாலகனே...
மனுமகனே வா..வா.. வா வா.. வா...-2

1.தேவனருள் துணையாக
தேனமுதின் விருந்தாக
வாழும் கிறிஸ்மஸ் இனிதாகும்
அன்னை மேரி தந்தை யோசேப்பு
தியாகம் செய்திடவே-2

அஞ்ஞான இருள் நீக்க வந்தாய்
மெய் ஞான வழி காட்டவே
மண்ணில் வந்து என்னில் மலர்ந்தாய்
நான் உன்னை தாலாட்டவே-கண்மணியே

2.நீ வருக என்னை தேட
நாள் முழுதும் உன்னை பாட
நன்றியை நீ ஏற்க
உயிரும் உடலும்
பொன்னும் பொருளும்
யாவும் நீ அல்லவா-2

வாழ்ந்தாலும் உன்னோடு வாழ
மறைந்தாலும் உன்னில் சேர
தருவேன் என்னை பெறுவேன் உன்னை
நான் உந்தன் நிழலாகவே-கண்மணியே


English


Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S  janaki Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.