Maanitarae! Poerrunkalae! - Christking - Lyrics

    Maanitarae! Poerrunkalae!


    மானிடரே! போற்றுங்களே!
    மாநிலத்தில் பறைசாற்றுங்களே!

    மேலானவர் இயேசு மேலானவர்
    ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2



    1. இருளில் ஒளியும் இயேசு – நம்
    இதய விளக்கும் இயேசு
    மருள்வோர் வழியும் இயேசு – அவர்
    மனதின் உறுதி இயேசு
    அருளின் சுனையும் இயேசு – உயர்
    அன்பின் பொருளும் இயேசு

    2. உலகம் அவரால் வாழும் – அதில்
    உயிர்கள் புனிதம் ஆகும்
    பலரின் வாழ்வு மாறும் – பாவப்
    பழிகள் யாவும் தீரும்
    நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
    நிறையக் குடும்பம் தோறும்



    3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
    அழிவைக் காண நேரும்
    மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
    மனங்கள் பயந்து சாகும்
    நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
    நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்


    Maanidarae! Pottungalae!
    Maanilaththil Paraisaattungalae!

    Maelaanavar Yesu Maelaanavar
    Aakaayam Poomikkum Maelaanavar – 2



    1. Irulil Oliyum Yesu – Nam
    Ithaya Vilakkum Yesu
    Marulvor Valiyum Yesu – Avar
    Manathin Uruthi Yesu
    Arulin Sunaiyum Yesu – Uyar
    Anpin Porulum Yesu

    2. Ulakam Avaraal Vaalum – Athil
    Uyirkal Punitham Aakum
    Palarin Vaalvu Maarum – Paavap
    Palikal Yaavum Theerum
    Nilavum Makilchchi Naalum – Ini
    Niraiyak Kudumpam Thorum



    3. Alaikal Vaalvil Mothum – Palar
    Alivaik Kaana Naerum
    Malaikal Peyarnthu Pokum – Palar
    Manangal Payanthu Saakum
    Nilaiyaayk Karangal Korppaar – Nammai
    Nijamaayk Karaiyil Serppaar

    Maanitarae! Poerrunkalae! Maanitarae! Poerrunkalae! Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.