Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும் - Christking - Lyrics

    Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும்


    மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
    கிருபை விலகாது
    சமாதானம் நிலை பெயராது
    மலைகள் விலகினாலும்..

    கிருபை விலகாதைய்யா -4
    (இயேசையா உம்)

    கோபம் கொள்வதில்லை
    என்று வாக்குரைத்தீர்
    கடிந்து கொள்வதில்லை
    என்று ஆணையிட்டீர்(என்மேல்)
    பாவங்களை மன்னித்தீர்
    அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
    இயேசு எனக்காய் பலியானதனால்

    நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
    கொடுமைக்கு நான் தூரமாவேன்
    பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
    எதுவும் என்னை அணுகுவதில்லை

    எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
    வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
    எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
    குற்றப்படும்படி செய்திடுவீர்

    மனிதர்கள் விலகினாலும்
    நம்பினோர் கைவிரித்தாலும்
    கிருபை விலகாது
    சமாதானம் நிலைபெயராது
    மலைகள் விலகினாலும்…


    Malaikal Vilakinaalum
    Parvathangal Nilai Peyarnthaalum
    Kirupai Vilakaathu
    Samaathaanam Nilai Peyaraathu
    Malaikal Vilakinaalum..

    Kirupai Vilakaathaiyyaa -4
    (Iyaesaiyaa Um)

    Kopam Kolvathillai
    Entu Vaakkuraiththeer
    Katinthu Kolvathillai
    Entu Aannaiyittir(Enmael)
    Paavangalai Manniththeer
    Akkiramangal Ennnuvathillai
    Yesu Enakkaay Paliyaanathanaal

    Neethiyinaal Naan Sthirappaduvaen
    Kodumaikku Naan Thooramaavaen
    Payamillaathiruppaen Thikilukku Thooramaavaen
    Ethuvum Ennai Anukuvathillai

    Enakku Virothamaay Elumpum Aayutham
    Vaaykkaathae Pokum Entu Vaakkaliththeer
    Enakku Virothamaay Niyaayaththil Elumpum Naavai
    Kuttappadumpati Seythiduveer

    Manitharkal Vilakinaalum
    Nampinor Kaiviriththaalum
    Kirupai Vilakaathu
    Samaathaanam Nilaipeyaraathu
    Malaikal Vilakinaalum…

    Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும் Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.