Appa Thayala Gunanandha

Album : | Artist :
அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ
கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி
மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே - தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே
என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ - உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே - என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே
நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே - பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே
Appa Thayala Gunanandha
Reviewed by Christking
on
January 21, 2018
Rating:
