Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில் - Christking - Lyrics

    Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில்

    மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
    மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

    லோகப் பாவம் தீர்க்க பலியான
    தேவ ஆட்டுக் குட்டியானவர்
    சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
    இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்

    இயேசுவே கல்வாரி சிலுவையில்
    ஏறி ஜீவன் தந்திராவிடில் - ஏழையான்
    என் பாவ பாரங்களை எங்கு
    சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில்

    தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
    என்று இயேசு கதறினாரே
    பாவத்தால் பிதாவின் முகத்தையும்
    பார்க்கவும் முடியவில்லையோ - அவர்

    அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
    அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
    ஆச்சரிய தேவ அன்பைப் பாட - ஆயிரம்
    நாவுகள் போதுமோ - பதினாயிரம்

    பாவ பாரம் லோகக் கவலைகள்
    தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
    தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி
    ஆற்றித் தாங்குவார் அவர் - இப்போ

    கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
    கல் மனமும் உருகிடுமே
    மாய லோக ஆசை வஞ்சிக்குமே
    மாறிடாத இயேசு போதுமே - என்றும்
    Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில் Meetpar Yesu Kurisil - மீட்பர் இயேசு குருசில் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.